நடுரோட்டில் நண்பனை கொடூர கொலை செய்த கொடூரம்.! வெளியான பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள்.!!
in Karnadaga crime police investigation going on
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தீபாஞ்சலி நகர் அருகே வசித்து வந்தவர் மஞ்சுநாத் (வயது 25). இவர் ஸ்ரீராமபுரத்தில் வசித்து வரும் நண்பர்களை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வந்திருந்தார்.
இந்த நிலையில்., ஸ்ரீராமபுரத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நண்பர் ஒருவருடன் மஞ்சுநாத் நடந்து சென்று கொண்டு இருந்த நிலையில்., எதிரே வந்த சிலர் மஞ்சுநாத்துடன் திடீரென சண்டையிட்டு., தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதுமட்டுமல்லாது கைகளில் இருந்த ஆயுதங்களை எடுத்து அடித்ததில் இரத்த வெள்ளத்தில் மிதந்த மஞ்சுநாத் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது தொடர்பான தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.
மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில்., மஞ்சுநாத் துவக்கத்தில் ஸ்ரீராமபுரம் பகுதியில் வசித்து வந்ததும்., சமீபத்தில் தீபாஞ்சலி நகருக்கு சென்றுள்ளதும் தெரியவந்தது. ஸ்ரீராமபுரத்தில் வசித்த நேரத்தில் தனது நண்பர்களிடம் பணம் வாங்கி இருந்ததும்., இதனை கொடுக்காமல் இருந்ததால் பணம் தொடர்பான பேச்சு வார்த்தைக்கு மஞ்சுநாத்தை நண்பர்கள் அழைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் அரங்கேறிய கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும்., இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிரளவில் பதிவாகியிருப்பதும்., இதன் மூலமா கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Karnadaga crime police investigation going on