விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த 16 வயது மாணவி.. முன்னாடியே சொன்னாலே என்று கண்ணீரில் கரைபுரண்ட பெற்றோர்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பீதர் மாவட்டம் அவராத் அருகிலிருக்கும் கிராமத்தைச் சார்ந்த தொழிலாளியின் மகள் சுப்ரியா (வயது 16). இவர் அங்குள்ள புறநகர் பகுதியில் இருக்கும் பள்ளியில் பயின்று வருகிறார். 

பள்ளியிலேயே அமைந்துள்ள விடுதியில் சுப்ரியா தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்த நிலையில், சுப்ரியா நேற்று இரவு நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட சக மாணவிகள் அலறியடித்துள்ளனர். 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து சென்ற விடுதி காப்பாளர் இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

பின்னர் இது தொடர்பான பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவலை அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று சுப்ரியாவின் உடலை கட்டியணைத்து கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து இதுதொடர்பாக காவல் நிலையத்தில், தங்களின் மகள் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், ஆசிரியர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உள்ளதாக தெரிவித்துள்ளனர் இதனையடுத்து தொடர்பான புகாரை ஏற்பட்ட ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karandaga girl student suicide died police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->