9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம்..! பிரேத பரிசோதனையில் பேரதிர்ச்சி.. கொந்தளிப்பில் மக்கள்.!!
in karanadaga child sexual harassment and murder police arrest culprit
கர்நாடக மாநிலத்தில் 9 வயதுடைய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தின் 15 ஆம் தேதியன்று கோவிலுக்கு சென்ற நிலையில்., கோவிலில் உள்ள கண்காட்சி பகுதியில் இருந்த போது மாயமாகியுள்ளார். பின்னர் இவரது உடல் அங்குள்ள குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
மேலும்., சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி கோவிலில் இருந்து மாயமாகியது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட விசாரணையில்., 21 வயதான சுரேஷ் என்ற இளைஞனை கைது செய்த நிலையில்., மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளபட்ட சிறுமி., மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும்., சிறுமி தற்போது 4 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியன்று தனது சகோதரன் மற்றும் உறவினர்களுடன் கோவில் திருவிழாவிற்கு சென்ற நிலையில்., சிறுமியின் சகோதரன் டிசம்பர் 15 ஆம் தேதியன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
மேலும்., சகோதரி எங்கே என்று தாயார் கேட்ட நிலையில்., இரவு 7 மணிக்கு மேல் சகோதரியை நான் காணவில்லை என்று கூறவே., இதனையடுத்து அங்குள்ள பகுதிகளில் உறவினர்கள் சிறுமியை தேடி அலைந்துள்ளனர்.
பின்னர் சிறுமியின் உடல் டிசம்பர் 16 ஆம் தேதியன்று குளத்தில் கண்டறியப்பட்ட நிலையில்., சிறுமியின் ஒருபாதி ஆடை காணாமல் போயுள்ளது என்றும்., தற்போது திருத்தும் செய்யப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in karanadaga child sexual harassment and murder police arrest culprit