மகளின் திருமண செலவிற்கு பணம் இல்லை.. கைவிரித்த உறவினர்கள்.. விவசாய நிலையத்தில் உள்ள மரத்தில் பிணமாக தொங்கிய விவசாயி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள காளஹஸ்தி அருகேயுள்ள கத்தருளப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் நாகராஜ் (வயது 48). இவரது மனைவியின் பெயர் எல்லம்மா. இவர்கள் இருவருக்கும் பிரபாவதி மற்றும் சியமிலா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 

வரும் 13 ஆம் தேதியன்று பிரபாவதிக்கு திருமணம் நடைபெற பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளின் திருமண செலவிற்கு பணம் இல்லாது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டு வந்துள்ளார். 

பெங்களூரில் இருக்கும் உறவினரின் இல்லத்திற்கு சென்று பணம் கேட்க மனைவி மற்றும் மகளை உடன் அழைத்து சென்ற நிலையில், பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் மனைவி மற்றும் மகள்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

தான் பின்னாலேயே வருகிறேன் என்று கூறிவிட்டு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்ததால், இருவரும் மீண்டும் ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில், நாகராஜ் இல்லத்திற்கு வராமல் இருந்துள்ளார். 

இவரை காணாது தேடியலைந்த குடும்பத்தினர் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, கோலாருக்கு அருகே வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்த நிலையில், அங்கிருந்த கத்தர்பள்ளி கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kalahasti farmer attempt suicide due to economically poor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->