தாய், குழந்தை, கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த சைக்கோ கணவன்.! கண்ணீரில் கிராம மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடர்மா மாவட்டத்தில் இருக்கும் ஹரிஜன் டோலா கிராமத்தை சார்ந்தவர் காங்கோ தாஸ் (வயது 30). இவரது தாயாரின் பெயர் சாந்தி (வயது 60) மற்றும் ஷீலா தேவி (வயது 27) என்ற மனைவியும்., இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

ஷீலா தேவி தற்போது எட்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில்., அதிகாலை சுமார் 2.30 மணிக்கு வீட்டில் இருந்த காங்கோ தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை கவனித்த காங்கோவின் தாயார் மற்றும் உறவினர்கள் காங்கோ தாஸை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். 

இந்த நேரத்தில் கடுமையான ஆத்திரம் அடைந்த காங்கோ தாஸ் தனது வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து தாய்., மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அனைவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

died, murder, killed, suicide attempt,

ஒரு குழந்தை படுகாயமடைந்த நிலையில்., இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டிற்குள் பதுங்கியிருந்த காங்கோ தாஸை கைது செய்தனர். மேலும்., இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in jarkhand physio killed her family police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->