பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து போட்டுத்தள்ளிய இந்திய இராணுவம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாராமுல்லா மாவட்டத்திற்கு உட்பட்ட சாட்டுல்லோ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இந்த தகவலை அறிந்த பாதுகாப்பு படையினர், இப்பகுதியை சுற்றி வளைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாவரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். 

இதனையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தினை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை சரணடையக்கூறி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்காத பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். 

இதன்பின்னர் பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலை மேற்கொண்ட நிலையில், இருதரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டான்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In jammu Kashmir terrorist killed by Indian army


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->