ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் இராணுவத்தினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை.!! நீடிக்கும் பதற்றம்.!!
in jammu kashmir pulvama terrorist attack
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தானது மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.மேலும்., ஜம்மு - காஷ்மீருக்கான மணிலா அந்தஸ்தும் நீக்கம் செய்யப்பட்டு., யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.
இந்த நடவடிக்கைகளுக்கு பின்னர் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் பார்த்துக்கொள்ளும் வகையில்., அனைத்து விதத்திலும் பாதுகாப்பானது அதிகரிக்கப்பட்டது.
இந்த தருணத்தில்., அவ்வப்போது எல்லை மீறிய துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு தாக்குதல் போன்றவை அரங்கேறியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்பட்ட நிலையில்., இவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசும் இரகசியமாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில்., ஜம்மு-காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இருக்கும் தேர்வு மையத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகளுக்கும் - இராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடானது நடைபெற்று வருகிறது. பள்ளியில் இருந்த 5 மாணவர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டையானது நடைபெற்று வருவதால்., தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in jammu kashmir pulvama terrorist attack