எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாக்கிஸ்தான் இராணுவம்.. மீண்டும் தாக்குதல்.!!
In Jammu Kashmir Poonch Sector Pak Army Attacked Indian Villages
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி செயல்பட்டு வருகிறது. இந்திய பகுதியில் உள்ள நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், இந்த தாக்குதல் மூலமாக பாதுகாப்பு படையினரை ஒருபுறம் திசைதிருப்பி, மற்றொரு புறம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பவும் உதவி செய்து வருகிறது. இவ்வாறாக நடத்தப்படும் தாக்குதலில் பெரும்பாலும் ராக்கெட் குண்டு போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் எல்லை பகுதியில், பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் தரப்பிலும் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In Jammu Kashmir Poonch Sector Pak Army Attacked Indian Villages