மினி பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நேர்ந்த சோகம்.! பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு 10 பேர் பரிதாப பலி.!!
in jammu kashmir bus accident 10 peoples died
இந்த உலகம் முழுவதும் எதிர்பாராத விதமாக பல தொடர் விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் தங்களின் உயிர் மற்றும் உடமைகளை இழந்து வாடி வருகின்றனர். இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது வாகனங்கள் விபத்துகளில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கதையாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள கேஷிவானில் இருந்து கிஷ்த்வார் நோக்கி பயணிகளை ஏற்றுக்கொண்ட மினி பேருந்தானது சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தானது கிஷ்த்வார் அருகில் சென்று கொண்டு இருந்தது.
இந்த நேரத்தில்., பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பள்ளத்தாக்கில் உருண்டதில் பேருந்தில் பயணித்த பயணிகள் படுகாயமடைந்த நிலையில்., உயிருக்கு போராடி துடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்., 10 பேர் சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும்., படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
English Summary
in jammu kashmir bus accident 10 peoples died