எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவம்.. இந்திய இராணுவ வீரர் வீரமரணம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நாட்டுடைய இராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. 

இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவத்தினர் சார்பாக பதிலடியானது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், காஷ்மீரில் இருக்கும் பூஞ்ச் மாவட்டம் தேக்வார் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறிய தாக்குதல் நடைபெற்றது. 

பாகிஸ்தான் இராணுவத்தினர் நேற்று மதியம் 3.45 மணிக்கு பீரங்கி வைத்து தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், எல்லையில் அத்துமீறி ஊடுருவ முயன்ற செயலை இந்திய இராணுவத்தினர் தடுத்தனர். 

இந்த நேரத்தில், இருதரப்பிற்கும் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் இந்திய இராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும், 3 வீரர்கள் காயமடைந்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in jammu kashmir border pakistan army shootout indian soldier died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->