ஜம்முவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.. பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் பிஜிபோஹ்ரா பகுதியில் சி.ஆர்.பி.எப் மையமானது செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள், மையத்தில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் மீது கையெறிகுண்டுகளை வைத்து தாக்குதல் மேற்கொண்டனர். 

மேலும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்த நிலையில், ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து இவரை மீட்ட சக வீரர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கவே, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இவர்களை தற்போது தேடி வரும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் விவகாரத்தில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் மேற்கொண்டதாக பொறுப்பேற்றுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Jammu CRPF officers attacked by terrorist


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->