பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில்... அதிரடி நடவடிக்கையில் இந்திய இராணுவம்..!!
in jammu border terrorist died indian army takes action
இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து பாகிஸ்தான் நாட்டினை சார்ந்த பயங்கரவாத அமைப்பினர் இந்தியாவில் பல தாக்குதல் நடத்த முயற்சித்து வருகின்றனர்.
மேலும்., இந்த விஷயத்திற்கு பின்னர் அயோத்தி வழக்கிலும் பரபரப்பு தீர்ப்புகள் வெளியாகி இராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த விஷயங்கள் காரணமாக பயங்கரவாதிகள் இந்தியாவில் எப்படியாவது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாவே உளவுத்துறையின் சார்பாக அவ்வப்போது தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும்., இந்திய எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டு வந்தது.
தற்போது உளவுத்துறையின் சார்பாக மீண்டும் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாக்கிஸ்தான் நாட்டினை சார்ந்த பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் எல்லையில் அத்துமீறி ஊடுருவி தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்., ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள டிராலின் குல்சான்பெரா பகுதியை சார்ந்த இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அறிந்த இராணுவ படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கட்டிடத்தை சுற்றிவளைத்ததை அடுத்து, உள்ளே இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஹசிபுல் முஜாஹிதின் அமைப்பின் கமாண்டர் ஹம்மாத் கான் உட்பட 3 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in jammu border terrorist died indian army takes action