இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கம்.! அச்சத்தில் வீதியில் தஞ்சம் புகும் மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் நிலநடுக்கத்தின் தாக்கமானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தோனேசியா., ஜப்பான்., அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கமானது ஏற்பட்டு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. 

இந்த நிலையில்., இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி வந்த நிலையில்., மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சட்டரா மாவட்டத்தில் இன்று காலைப்பொழுதில் மிதமான நிலநடுக்கானது மக்களால் உணரப்பட்டது. வீடுகள் அதிர்வதை அறிந்த மக்கள்., அச்சத்தில் வீடுகளில் இருந்து வெளியேறியதை அடுத்து இது தொடர்பான பதிவுகள் வெளியிடப்பட்டது. 

ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.8 ஆக இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானதாகவும்., இதனைதொடர்ந்து மீண்டும் இரண்டு மணிநேர இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில் 3 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் குறித்த சேதங்கள் ஏதும் வெளியாகாத நிலையில்., நேற்று மாலையில் ஒடிசாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in india have a minor earthquake mumbai and odisa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->