தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்த மகன்.. வீட்டிற்குள்ளேயே பள்ளம் தோண்டி புதைத்த கொடூரம்.!!
in india father killed by son police arrest
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கன்னட் பகுதியை சார்ந்தவர் நாம்தேவ் சவாண் (வயது 50). இவர் கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே மாயமாகிய நிலையில், இவர் குறித்த தகவல் தெரியாமல் இருந்தது.
இந்த சமயத்தில், இவர் கொலை செய்யப்பட்டு, இவரது உடல் வீட்டின் உள்ளேயே புதைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டில் தோண்டுகையில், இரண்டரை அடி பள்ளத்தில் நாம்தேவின் உடல் இருந்துள்ளது.
இதன்பின்னர் காவல் துறையினர் நாம்தேவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான விசாரணையில், நாம்தேவின் 16 வயதுடைய மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சமயத்தில், இவர்களுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த சிறுவன் தந்தையை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளான். படுகாயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே மயக்கமடையவே, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளான்.
பின்னர் காவல் துறையினருக்கு பயந்து வீட்டிலேயே பள்ளம் தோண்டி புதைத்ததும், உறவினர் முறையிலான தம்பியிடம் இந்த விஷயத்தை தெரிவித்த நிலையில், இது எப்படியோ அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in india father killed by son police arrest