கரோனா பலி எண்ணிக்கை 25..! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது..!!
in India corona virus symptoms and death announce by health ministry
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்பட துவங்கியுள்ளது.
இதனால் இந்தியா முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய மட்டும் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 979 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் 25 பேர் பலியான நிலையில், 86 பேர் சிகிச்சை முடித்து இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in India corona virus symptoms and death announce by health ministry