கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து..! மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் துடிதுடித்து உடல் நசுங்கி பலி.!!
in hariyana family members died due to building collapse
இந்த முழுவதிலும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. என்னதான் நாம் நவீன மயமான நிலையில் தற்போது வாழ்ந்து வந்தாலும்., விபத்துகள் என்பது நம்மிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமும் ஏற்படும் விபத்துகளில் சிக்கி பரிதமபாக உயிரிழக்கும் நபர்களும்., உடமைகளை இழக்கும் நபர்களும்., அவர்களின் குடும்பத்தாருக்கு பெறும் சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட சென்னையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடம் இடிந்து விழுந்து தாய்-மகன்-மகள் என மூவர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த நிலையில்., இதனைப்போன்ற ஊரு சோக சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா பகுதியில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தில் குடிசைகளை அமைத்து கட்டிட தொழிலாளி தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நேரத்தில்., கட்டிடத்தின் சுவரானது எதிர்பாராத விதமாக இடிந்ததை அடுத்து., வீட்டில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி துடித்துள்ளனர். இவர்களின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்., சுமார் மூன்று குழந்தைகள் உட்பட 5 பேரை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in hariyana family members died due to building collapse