50 அடி ஆழத்தில் ஐந்து வயது சிறுமி..! ஆழ்துளைக்கிணற்றில் அடுத்த பெரும் சோகம்..!!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டி பகுதியை சார்ந்த இரண்டு வயது சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

80 மணிநேரத்துக்கும் மேலான தொடர் மீட்புப்பணிகள்., பலதரப்பட்ட முயற்சிகள் என அனைத்து விதமான முயற்சியும் இறுதி சமயத்தில் தோல்வியை தழுவ இறந்த நிலையில்., மக்களை தவிக்க வைத்து இறந்தான். 

இதனைத்தொடர்ந்து திறந்திருக்கும் ஆழ்துளைக்கிணறுகளை சரியான முறையில் மூடுவதற்கு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில்., ஹரியானா மாநிலத்தில் இதனைப்போன்ற துயர் அரங்கேறியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங் புரா கிராமத்தில் வசித்து வரும் ஐந்து வயதுடைய சிறுமி நேற்று எதிர்பாராத விதமாக திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார். 

தற்போது சிறுமி ஆழ்துளைக்கிணற்றின் 50 அடியில் மாட்டிக்கொண்டு இருப்பதாகவும்., சிறுமியை மீட்க தேவையான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In hariyana child struggled in bore well rescue operation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->