தேர்வு எழுதாமலேயே ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பாஸ்...!!
in Gujarat govt announce till 9 students and 11 students pass without exam
உலகம் முழுவதும் அச்சுறுத்தியுள்ள கரோனா தொற்று, இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. சுமார் 514 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தினமும் அரசால் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகளவு ஒருசேர கூடுவதற்கு தடை மற்றும், தனியார் நிறுவனங்களுக்கு தடை, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் இயங்க அனுமதி வழங்ப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவ - மாணவியர்கள் தேர்வு எழுதாமலேயே அனைவரும் பாஸ் என்று அறிவித்துள்ளது...
மேலும், 11 ஆம் வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்...
கரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. பரவத்தால் தேர்வை நடத்த இயலாத சூழலில் இது உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Gujarat govt announce till 9 students and 11 students pass without exam