அடுத்தடுத்து கரோனாவிற்கு இருவர் பலி.. பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் உயர்வு.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகரில் உள்ள சந்தையில், இறால் விற்பனை செய்யும் பெண்மணிக்கு ஏற்பட்ட வைரஸ் நோயானது உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கூட்டம் கூட்டமாக மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், மேலை நாடுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

நேற்றைய நிலவரப்படி உலகளவில் பலி எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கிடைத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனாவால் 935,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,223 பேர் பலியாகியுள்ளனர். 194,260 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 

இந்தியாவிலும் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் அதிகளவு கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த நபர்களுக்கு அதிகளவு கரோனா வைரஸின் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. கரோனா வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில், இன்று காலை குஜராத் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் உயிரிழந்துள்ளார். மேலும், இவருடன் இருந்த 4 குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் ஸ்ரீலங்காவுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பலா பகுதியை சார்ந்த 67 வயதுடைய பெண்மணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரியானா மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று காலையிலேயே இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Gujarat and Chandigarh corona positive patients died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->