வாய் பேச முடியாத பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன்.! இறுதியில் அரங்கேறிய பெரும் சோகம்..!!
in Gujarat 23 year old girl rapped by physically challenged person
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபத் அருகேயுள்ள அம்ராய்வாடி பகுதியை சார்ந்த 23 வயதுடைய இளம்பெண்., காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணாவார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டில் இருந்து மாயமாகிய நிலையில்., இவரை காணாது பெற்றோர்கள் இரண்டு நாட்கள் அவர்களுக்கு தெரிந்த இடமெல்லாம் தேடி வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., அதே பகுதியை சார்ந்த மங்கேஷ் பரத்வாஜ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞன்., பெண்ணை தனது வாகனத்தில் கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு., அங்குள்ள மைதான பகுதியில் பெண் திக்கற்று நின்றதாக கூறியுள்ளான். இந்த தருணத்தில்., பெண்ணின் ஆடைகள் கிழிக்கப்பட்டும்., கறைபடிந்தும் இருந்ததை அடுத்து., மங்கேசின் நடவடிக்கையிலும் பெற்றோர்கள் சந்தேகித்துள்ளனர்.
இதனையடுத்து பெண்ணை அழைத்து சென்று அங்குள்ள மைதானத்திற்கு வீட்டில் உள்ள அனைவரும் சென்ற நிலையில்., அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் விசாரித்த நேரத்தில்., பெண்ணை மாற்றுத்திறனாளி இளைஞர் அழைத்து வந்ததும் உண்மை என்பதும்., இந்த செயல் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளதும் தெரியவந்தது.
பின்னர் இது குறித்து பெண்ணிடம் விசாரித்த சமயத்தில்., மங்கேஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சம்பவத்தன்று பெண் வீட்டில் இருந்த நிலையில்., மாற்றுத்திறனாளி இளைஞரான மங்கேஷ்., பெண்ணை அழைத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனை ஏற்ற காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து மங்கேஷை கைது செய்து., பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Gujarat 23 year old girl rapped by physically challenged person