குஜராத்தில் மேலும் 2 பேர் கரோனாவால் பாதிப்பு..!! இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.!!
in Gujarat 2 corona symptoms persons in hospital
சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
இந்தியா முழுவதிலும் கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது வரை 507 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், குஜராத் மாநிலத்தை சார்ந்த 2 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து, மொத்த இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 509 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 10 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Gujarat 2 corona symptoms persons in hospital