டெல்லியில் பயங்கர தீவிபத்து... 32 பேர் உடல் கருகி பரிதாப பலி..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் அரங்கேறி., இதனால் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. 

ஒரு சில இடங்களில் அதிஷ்டத்தின் காரணமாக மக்கள் தப்பித்தாலும்., சில இடங்களில் நடைபெறும் விபத்துகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

delhi fire accident,

மேலும் இதற்கு அருகில் இருக்கும் அனாஜ் மண்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 50 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

சுமார் 30 தீயணைப்பு வாகனங்களில் சென்றுள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 32 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in delhi fire accident 32 peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->