அடர்ந்த மரங்கள் நிறைந்த காடு.! காதலியுடன் என்ஜாய் செய்வதற்கு காதலர்கள் செய்த லீலைகள்.! விசாரணையில் அதிர்ந்துபோன காவல் துறையினர்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகரான டெல்லி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே அதிகளவில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களானது தொடர்ந்து அதிகளவில் களவு போக தொடங்கியது. இதனை அறிந்த வாகனத்தின் உரிமையாளர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க துவங்கினர். 

இதனை அறிந்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த நேரத்தில் அங்குள்ள உத்தம் நகரில் இருக்கும் பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள்., புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பதை போலவே இருந்துள்ளது. 

இதனையடுத்து அந்த வாகனத்தில் இருந்த ரவிசிங்படோரியா (வயது 27) மற்றும் சுக்விந்தர்சிங் (வயது 23) ஆகிய இளைஞர்களை அழைத்து விசாரித்துள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் முன்னுக்கு பின்னர் முரணாக பதில்கள் தெரிவித்ததை அடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில்., காதலிகளுடன் உல்லாசமாக ஊர் சுற்றுவதற்கு இருசக்கர வாகனங்கள் தேவைப்பட்டதை அடுத்து., வாகனங்களை திருடி பின்னர் ஊர் சுற்றி முடித்தவுடன்., குறைந்த விலைக்கு வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். 

இவர்கள் திருடிய வாகனங்கள் மூலமாக உத்திரகன்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் வரை சென்று வந்துள்ளததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்., இவர்களின் காதலியையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Delhi a bike robbery to go long ride with his girl friend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->