பெற்றெடுத்த தாய், பக்கத்து வீட்டுக்காரர் என கொடூர கொலை செய்த கொடூரம்.. காவல்துறையினர் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா கிராமத்தில் காவல் துறையினர் 40 வயதான நபரை, நான்கு பேரை கொலை செய்ததாக கூறி கைது செய்துள்ளனர். 

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் கோர்பா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சார்ந்த 40 வயதுடைய நபர் மாந்த்ரீகர் என்று கூறிக்கொண்டு சுற்றி திரிந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், இவர் சம்பவத்தன்று தனது 60 வயது தாய், பக்கத்து இல்லத்தில் வசித்து வந்த 50 வயதுடைய நபர் மற்றும் 80 வயதுடைய நபர் என 4 பேரை நள்ளிரவு நேரத்தில் கொலை செய்துள்ளார். மேலும், ஆறு சேவல், இரண்டு ஆடுகளை கோடரியால் வெட்டி பலி கொடுத்துள்ளார். 

இவர் தனது இல்லத்தில் பூஜை செய்ததற்கான அடையாளமும் இருந்த நிலையில், சேவல் மற்றும் ஆடுகளின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர் அனைவரையும் பலி கொடுத்தது தெரியவந்துள்ளது. இவரை கைது செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chandigarh murder police arrest man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->