என் வீட்டுக்காரர் குளிக்க மறுக்கிறார்.. பல் துலக்க மறுக்கிறார்.. அதனை எனக்கு கொடுத்துவிடுங்கள்.. மனைவி பகீர்.!!
in Bihar wife want divorce due to husband activity
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள விஷாலி மாவட்டத்தினை சார்ந்தவர் மனிஷ்ராம் (வயது 23). இவரது மனைவியின் பெயர் சோனிதேவி (வயது 20). இவர்கள் இருவருக்கும் கடந்த 2017 ஆம் வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில்., சோனிதேவி மாநில பெண்கள் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில் சோனி தேவி தெரிவித்துள்ளதாவது.,
எனது கணவரும் - நானும் விசாலி மாவட்டத்தில் உள்ள நாயகனோ கிராமத்தில் வசித்து வரும் நிலையில்., கடந்த இரண்டு மாதமாக எனது கணவரின் நடவடிக்கை சரியில்லாமல் இருந்துள்ளது.
மேலும்., கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஷேவிங் செய்யாமல் தாடியுடன் இருந்து வருவதாகவும்., தினமும் பல் துலக்காமல் குளிக்காமல் இருந்து வருகிறார். இதனை என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
எங்கள் இருவருக்கும் குழந்தையும் இல்லாத நிலையில்., இவரின் நடவடிக்கையால் நான் இவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் மாநில மகளிர் அமைப்பினர் கூறிய சமயத்தில்., சோனி தேவிக்கு 2 மாதம் அவகாசம் கொடுத்துள்ளதாகவும்., இந்த காலத்திற்குள் இருவரும் புரிந்து கொண்டு., கணவரும் தனது செயல்பாடுகளை மாற்றாவிட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Bihar wife want divorce due to husband activity