பெருமழை வெள்ளத்தால் 20 பேர் பரிதாப பலி.! திக்குமுக்காடி தவிக்கும் மக்கள்..!!
in bihar rain flood 20 members died rescue going on
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்களின் முக்கிய நகர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து வந்த நிலையில்., பல இடங்களில் தொடர் மழையின் எதிரொலியாக பல உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது.
இந்தியாவில் உள்ள கேரளா., கர்நாடகா., மும்பை., அசாம்., உத்திர பிரதேசம் போன்ற பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதியுற்றனர். மேலும்., பலரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாது பெருமளவிற்கு சேதங்களும் ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக., ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்த கனமழையின் எதிரொலியாக ஒரே நாள் இரவில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில்., இதனை போன்ற பெரும் துயரமானது பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பீகாரில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் பெருத்த மழையானது பெய்து வந்தது. இந்த பெரு மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கானது கரைபுரண்டு ஓடிய ணியில்., அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மழை வெள்ளமானது புகுந்ததை அடுத்து., நோயாளிகள் கடுமையாக அவதியுற்றனர்.
இந்த தருணத்தில்., பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் நகரில் மழையால் சுவர் இடிந்து சேதமடைந்த விபத்தில் சுமார் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும்., சாலையில் சென்று கொண்டு இருந்த ஆட்டோவின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். தற்போது மீட்பு பணிகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில்., மழை வெள்ளத்தால் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில நாட்களுக்கும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in bihar rain flood 20 members died rescue going on