கர்ப்பிணி பெண் பாலியல் பலாத்காரம்.. இறப்பு.. அதிரவைக்கும் தகவல்.. மருத்துவ ஊழியர், உறவினரின் காமுகம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் இருக்கும் மகத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அங்குள்ள பாகேபஜார் பகுதியை சார்ந்த கர்ப்பிணி பெண் வயிற்று வலியின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதியுள்ளார். 

இவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் கரோனா வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மார்ச் முதல் வாரத்தின் போது இல்லத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார். இல்லத்திற்கு திரும்பிய மூன்று நாட்களில் பெண் திடீரென உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்ப உறுப்பினர் மற்றும் மருத்துவமனை ஊழியர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. 

கரோனா வார்டில் பெண் இருந்த சமயத்தில் இரண்டு முறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில், பெண்ணிற்கு இரத்தப்போக்கு அதிகரித்து, குழந்தையின் நிலையும் மோசமடைந்துள்ளது. பெண்ணின் உடல்நிலை மேலும் மோசமந்தால், மருத்துவ ஊழியரின் போலியான தகவலால் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Bihar pregnant girl sexual abuse and died police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->