வீரமரணம் அடைந்த இராணுவ வீரரின் தங்கைக்கு அண்ணன் முறையில் திருமண ஏற்பாடுகள் செய்து சிறப்பித்த 50 இராணுவ வீரர்கள்.!!
in bihar military man sister marriage complete 50 army men
இந்திய இராணுவ துறையில் இருக்கும் விமான படை பிரிவில் பணியாற்றிய வீரரின் பெயர் ஜோதி பிரகாஷ் நிரலா. இவரது சொந்த மாநிலம் பீகார் ஆகும். இவர் கடந்த 2017 ஆம் வருடத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளை சூரசம்ஹாரம் செய்து வீரமரணம் அடைந்தார்.
இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ள நிலையில்., இவருக்கு அடுத்த படியாக மூன்று சகோதரிகள் இருந்துள்ளனர். இவர்களில் இரண்டு சகோதரிக்கு திருமணம் முடிந்த நிலையில்., மூன்றாவது சகோதரிக்கு திருமணம் முடியாமல் இருந்துள்ளது.
இந்த சமயத்தில்., இவரின் மூன்றாவது சகோதரிக்கு திருமண ஏற்பாடுகளை அவரின் பெற்றோர்கள் செய்திருந்த நிலையில்., திருமண விழாவில் பங்கேற்க மரணமடைந்த வீரரின் நண்பருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த அழைப்பை ஏற்று சுமார் 50 வீரர்கள் திருமணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில்., சகோதரியின் அண்ணன் முறையில் செய்யப்படும் அனைத்து சம்பர்தாயத்தையும் செய்து., ரூ.5 இலட்சம் பணத்தையும் வழங்கினர். இந்த பணத்தை ஏற்க மறுத்த இராணுவ வீரரின் தந்தை., இறுதியில் மகனின் சக நண்பர்களின் வற்புறுத்தலால் அன்போடு ஏற்று கொண்டார்.
English Summary
in bihar military man sister marriage complete 50 army men