22 வயது இளம்பெண்ணை இரயிலில் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த காமுகர்கள்.. காலில் விழுந்து மன்றாடியும் கேட்காது, கடவுள் கொடுத்த தண்டனை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் பல்வேறு குற்றசாட்டுகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பானவை காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான ஆய்வறிக்கைகள் படி, இந்தியாவில் நாளொன்றுக்கு 91 பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 22 வயது இளம்பெண்ணை இரயிலில் வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கைமுர் மாவட்டத்தை சார்ந்த இளம்பெண் (வயது 22), எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இவர் நேற்று முன்தினத்தின் போது அங்குள்ள பாட்னா மருத்துவமனைக்கு சென்று மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு, நள்ளிரவு நேரத்தில் ஊருக்கு வருவதற்காக பபுவா இரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். 

இந்த நேரத்தில், பாட்னாவில் இருந்து பபுவா செல்லும் அதிவிரைவு இரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார். இந்த பெட்டியில் பயணிகள் யாரும் இல்லை. இந்த விஷயத்தை நோட்டமிட்ட இரண்டு காமுக இளைஞர்கள், இரயில் பெட்டியில் எறியுள்ளனர். 

பின்னர் இளம்பெண்ணை இருவரும் சேர்த்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அதிவிரைவு இரயில் என்பதால் காவல் துறையினர் கண்காணிப்பிற்க்காக வந்துள்ளனர். 

பெண்ணின் அலறல் சத்தத்தை கவனித்த காவல் அதிகாரி, வாக்கி டாக்கியின் மூலமாக தகவலை தெரிவித்துவிட்டு இரயில் பெட்டிக்குள் சென்ற நேரத்தில், இளம்பெண்ணை இருவர் கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்து பிடிக்க முயற்சித்துள்ளார். 

காவல் அதிகாரியை கண்டதும் காமுகர்கள் தப்பிக்க முயற்சிக்கவே, முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதால் காவல் துறையினர் விரைந்து வந்து குற்றவாளிகளை கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காமுகர்களின் பெயர் பிரேந்திர பிரகாஷ்சிங்(வயது 26), தீபக் சிங் (வயது 28) என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in bihar HIV affected girl gang rapped in train


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->