தெலுங்கானா., உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து பீகாரில் பெரும் சோகம்..! எஸ்.பி அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பாலியல் வன்கொடுமை பிரச்சனையானது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. சிறுவயதுள்ள குழந்தைகள் முதல் வயதான பெண்கள் என அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும்., இளம் வயதுள்ள சிறுமிகளை காதல் என்ற வலையில் வீழ்த்தி., அவர்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சோகமும்., கொலை செய்யும் கொடூரமும் அரங்கேறி வருகிறது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பாலியல் வன்கொடுமையால் கொலைகள் அரங்கேறும் நிலையில்., தற்போது மீண்டும் பீகாரில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. 

 drama love,

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பெட்டியா என்ற கிராமத்தில் சிறுமியொருவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வரும் நபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 

இவர்களின் பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த நிலையில்., சிறுமிக்கு திருமண ஆசை காட்டி., காதலன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

drama love, fire, attempt suicide, suicide attempt fire,

இந்த நிலையில்., சிறுமி தற்போது கர்ப்பமாகவே., இது குறித்து காதலரிடம் தெரிவித்து திருமணம் செய்ய கூறி வற்புறுத்தி வந்துள்ளார். முதலில் திருமணம் செய்ய மறுத்த காதலன்., சிறுமியின் தொல்லை தங்க இயலாது ஆத்திரமடைந்து சிறுமிக்கு தீவைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளான்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அலறித்துடிக்கவே., சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெட்டியா எஸ்.பி. நிதாஷா குடியா விசாரணை மேற்கொண்டு., காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in bihar girl rapped by lover and try to kill police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->