மிகப்பெரிய நாசவேலைக்கு பக்கா பிளானுடன் புறப்பட்ட பயங்கரவாதிகள்.! வெளியான பகீர் தகவல்.!!
in assam terrorist arrest by police investigation going on
இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் அசாமில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை சார்பாக ரகசிய தகவல் மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்ட நிலையில்., மூன்று நபர்கள் இந்த தாக்குதலை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து டெல்லி மற்றும் அசாம் மாநில காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை செய்த மேற்கொண்ட நிலையில்., அசாமில் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற சோதனையில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் முகாதீர் இஸ்லாம், ரஞ்சித் இஸ்லாம், ஜெமீல்லோயிட் என்பதும்., இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பதும்., பெங்களூரில் மறைமுகமாக இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இவர்கள் பயிற்சி பெற்றதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் மூலமாக குண்டு வெடிப்பு நடத்த திட்டம் தீட்டப்பட்டதும்., இவர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் ஒரு கிலோ வெடிபொருள் மற்றும் வெடிகுண்டிற்கான மூலப்பொருள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது வாள் ஆயுதங்கள், 4 அலைபேசிகள் மற்றும் வரைபடங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்., மிகப்பெரிய நாசவேலை தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in assam terrorist arrest by police investigation going on