நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்.. அலறிய பயணிகள்.. திருப்பதியில் பெரும் சோகம்.!!
in andrapredesh bus accident peoples died
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் உள்ள சித்தூரை அடுத்துள்ள குப்பம் நகரில் இருந்து ஆந்திர மாநில அரசு ஆம்னி பேருந்து பயணிகளோடு வந்து கொண்டு இருந்துள்ளது.
இந்த பேருந்தை ரமேஷ் என்பவர் ஓட்டிவந்த நிலையில்., பேருந்து திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரி நாய்டுபேட்டை நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்துள்ளது.
இந்த நேரத்தில்., சபரிமலைக்கு சென்றுவிட்டு ஐயப்ப பக்தர்கள் திருப்பதிக்கு பேருந்தில் வந்துகொண்டு இருந்த நிலையில்., இன்று அதிகாலை சும்மர் 6 மணியளவில் அங்குள்ள தனியார் பால் பண்ணை அருகே வந்த நேரத்தில் இரண்டு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதியில் நொறுங்கிய நிலையில்., பேருந்தின் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்து கூச்சலிட்ட நிலையில்., இது குறித்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அனைவரையும் மீட்டனர்.
பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் அனைவரையும் அனுமதி செய்த நிலையில்., இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in andrapredesh bus accident peoples died