குழந்தையை கவனிக்க முடியாதென கொந்தளித்த கணவனின் கொடூர செயல்..! துடிதுடித்த மனைவி., கதறிய குழந்தையின் இறுதி சோகம்..!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியை அடுத்துள்ள அரவாக்கத்தை சார்ந்தவர் திரேச் குமார். இவரது மனைவியின் பெயர் கோமதி (வயது 27). இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய மகன் உள்ளார். திரேச் ஆந்திர மாநிலத்தில் உள்ள நாயுடுபேட்டையில் இருக்கும் மருந்தகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பணியின் காரணமாக குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில்., நேற்று முன்தினத்தன்று திரேச்குமார் வீட்டில் சமையலுக்காக கோழிக்கறி வாங்கிக்கொண்டு வந்துள்ளார். இந்த சமயத்தில்., சமையல் செய்யும் வேலை இருப்பதால்., மகனை கவனித்துக்கொள்ளுமாறு மனைவி., கணவரிடம் கூறியுள்ளார். குழந்தையை கவனித்து கொள்ள திரேச்குமார் மறுப்பு தெரிவிக்கவே., இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் கடுமையான ஆத்திரம் அடைந்த திரேச்குமார் - மனைவியை தாக்கியுள்ளார். இதுமட்டுமல்லாது ஆத்திரம் தீராமல் அருகில் இருந்த வயரை கொண்டு கோமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் கொலை செய்ததை உணர்ந்து அதிர்ச்சியடைந்த திரேச்குமார்., மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் போல்., மனைவியை தூக்கில் போட்டுவிட்டு., பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளான். 

died, murder, killed, suicide attempt, கொலை, தற்கொலை,

தகவலை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., கோமதியின் உடலை அவசர ஊர்தியின் உதவியுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்., கோமதி தற்கொலை தான் செய்து கொண்டார் என்று பெற்றோர்களும் நம்பியிருந்த நிலையில்., கோமதியின் உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து கோமதியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர்., பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் முடிவில் கோமதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானதை அடுத்து., திரேச்குமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., மனைவியை கொலை செய்ததை திரேச்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in andra predesh wife killed by husband police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->