சிறுமியை ஐந்து நாட்கள் கொடூர பாலியல் துன்புறுத்தலுக்கு கூட்டாக சேர்ந்து அரங்கேற்றிய நண்பன்.! இறுதியில் அரங்கேறிய துயரம்.!!
in andra predesh girl rapped by a gang when meeting with her friend
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளில் பெரும்பாலானவை பெண்களுடன் நன்கு பழகிய மற்றும் தெரிந்த நபர்களால் இழைக்கப்பட்டு வரும் கொடூரமானது பெரும் அதிர்ச்சியை அதிகளவு பதிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் மாவட்டத்தில் அரங்கேறிய கொடூரமானது வெளிவந்து பெரும் அதிர்வலையை இந்தியா முழுவதும் பதிவு செய்துள்ளது. அங்குள்ள ஆர்டிசி பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஜூன் 17 ஆம் தேதியன்று சிறுமி ஒருவர்., பேருந்திற்க்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டு இருந்துள்ளார்.
இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த சிறுமியின் நண்பன் ஒருவர் நான் கொண்டு அந்த இடத்தில் சேர்க்கிறேன் என்று கூறவே., சிறுமி கொடூரனின் வார்த்தைகளில் உள்ள விபரீதத்தை அறியாமல் அவனுடன் சென்றுள்ளார்.
இந்த நேரத்தில்., சிறுமியை தனது இல்லத்திற்கு அழைத்து சென்ற கொடூரன் தனது ஐந்து நண்பர்களுக்கும் சிறுமியை விருந்தாக்கி., கொடூர முறையிலான கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து உட்படுத்தியுள்ளான்கள்.
இவன்களது பிடியில் இருந்து தப்பித்த சிறுமி ஐந்து நாட்கள் கழித்து அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று தனக்கு நடந்த கொடுமையை கூறவே., உடனடியாக அவருக்கு தேவையான சிகிச்சையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பெறப்பட்ட நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில்., நெல்லுக்கு அருகே இருக்கும் பகுதியை சார்ந்த ஒரு கொடூரனை காவல் துறையினர் கைது செய்த நிலையில்., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்., இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
English Summary
in andra predesh girl rapped by a gang when meeting with her friend