இந்தியா போருக்கு தயாராகிறது., பிரதமர் வெளியிட்ட தகவல்!! - Seithipunal
Seithipunal


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்து  மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு ஆதரவாக உலக நாடுகளை சந்தித்து ஆதரவு திரட்ட முயன்றது. ஆனால் அதில் தோல்வியடைந்துள்ள அந்த நாடு, தற்போது இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான தனது ஆற்றாமையை புலம்பலாக வெளியிட்டு வருகிறது.

 இந்தியா காஷ்மீரில் போர் நடத்த தயாராகி வருவதாகவும் இந்தியா மீது மற்றொரு குற்றச்சாட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தானின்  சுதந்திர தினத்தையொட்டி நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்பதற்காக இந்தியா போருக்கு தயாராவதாகவும், எங்கள் நாட்டு படையினருக்கு வலுவான ஆதாரம் கிடைத்து உள்ளதாகவும், ஆனால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க எங்கள் ராணுவமும் தயாராக இருக்கிறது என தெரிவித்தார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து  ரத்து  என்ற இந்தியா எடுத்த நடவடிக்கையை மீண்டும் கண்டித்த இம்ரான்கான், இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் நாடுகள்கூட ஒன்று கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதற்காக இந்தியா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எதிர்வினையாக பாகிஸ்தான் 2 அடி எடுத்து வைக்கும் என அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imran khan says india ready to war


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->