சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலை விபத்து.. 10 பேர் உடல் சிதறி பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


பட்டாசு  தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீகார் மாவட்டம், பாகல்பூர் மாவட்டத்தில் கஜ்பலிசக்  பகுதியில் மகேந்திர மண்டல் என்பவர் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார். இந்நிலையில், இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்த 10 தொழிளாலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இடுபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த ஆலை சட்டவிரோதமாக இயங்குகிறது என்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Illegally operated firecracker factory accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->