வாழவிடாத உறவினர்கள்.. ஓடிப்போன இடத்திலும் தேடிவந்த கொடுமை.. கள்ளகாதலால் போன இரு உயிர்.!
illegal affair goes wrong
சொந்தக்காரர்களின் இம்சை தாங்க முடியாமல் கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் என்ற 28 வயது வாலிபருக்கும், 26 வயதான ஜோதி என்ற திருமணமான பெண்ணுக்கும் நடுவில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் பெண்ணின் கணவருக்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இப்படி இவர்கள் ஜாலியாக இருந்த விஷயம் ஒரு கட்டத்தில் இருவரின் வீட்டிற்கும் தெரியவந்துள்ளது. அப்பொழுது உறவினர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். பின்னர், இருவரும் தங்களது காதலை வாழ வைக்க வெளியூருக்கு தப்பிச்சென்று பெங்களூரு அருகில் உள்ள டவுன் பகுதி ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இருக்கும் பகுதியை நண்பர்கள் கண்டறிந்து வாழ விடாமல் தொந்தரவு கொடுத்தனர். இதன் காரணமாக, மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
இருவரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
illegal affair goes wrong