மகாராஷ்டிரா: தொழிற்சாலையில் ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் தொழிற்சாலை ஒன்றில் ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் 8 பேர் பலத்த தீக்காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த விபத்து குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விபத்து சந்தர்பாடா பகுதியில் அமைந்துள்ள மின் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடந்ததாக தெரிவித்தார்.

மேலும் மூன்று தொழிலாளர்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு தீயில் எறிந்தனர் என்றும், எட்டு பேர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hydrogen gas cylinder explosion in a factory in Maharashtra


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->