தனியறையில் கணவர் செய்த காரியம்..! எட்டிப்பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
husband suicide in front of wife and child
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரின்ஸ் என்பவரும் சந்திரிகா என்ற பெண்ணும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் உள்ள தொடர்பை முற்றிலுமாக முடித்துக்கொண்டார்.
கணவர் மற்றும் மனைவி இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று இருக்கின்றது. மருந்து நிறுவனத்தில் கணவர் பணிபுரிந்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக அவருடைய வேலையும் பறிபோனது. எனவே வருமானம் இல்லாமல் இருவரும் தவித்து வந்தனர். இதுகுறித்து கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில் தனி அறைக்குச் சென்ற கணவன் நீண்ட நேரமாக அறையைவிட்டு வெளியில் வராததால் கணவர் என்ன செய்கிறார் என்பதை காண ஜன்னலில் எட்டிப் பார்த்த சந்திரிக்கா மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார். காரணம் மனைவியின் புடவையால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் தன்னுடைய உறவினருக்கு கால் செய்து கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தெரிவித்துவிட்டார். அதன்பின்னர் மற்றொரு அறைக்கு சென்று தானும் தற்கொலை செய்து கொண்டார். தாய், தந்தை இருவரும் இறந்தது தெரியாமல் அந்த ஒரு வயது குழந்தை அழுது கொண்டிருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
husband suicide in front of wife and child