பெண் குழந்தை பெற்றதற்காக போனில் முத்தலாக் கொடுத்த கணவர்.!
husband muthalaq given to wife
இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பெண், கமில் என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து, கமிலின் மனைவிக்கு 5-வதாக மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 5வது குழந்தையும் பெண் என்று அறிந்த கமில், தொலைபேசி மூலம மனைவிக்கு முத்தலாக் தெரிவித்துள்ளார். இதை ஏற்க மறுத்த அந்த பெண் அஸ்மோலி காவல் நிலையத்தில் கமில் மீது புகார் தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி யமுனா பிரசாத் கூறுகையில், இந்திய கோர்ட் அமைப்பு மற்றும் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கமில் மீது முத்தலாக் கூறியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
English Summary
husband muthalaq given to wife