மனைவிக்காக காத்துகிடந்த மாப்பிளை.! போனில் வந்த பேரிடி., நேரில் கண்ட அதிர்ச்சி.!
husband lost his wife in avinasi accident
கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்னிஜோ ஜோஸ் மற்றும் அனு என்ற தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இருவரும் டெல்லி, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜாலியாக ஹனிமூன் கொண்டாடிவிட்டு திரும்பி இருக்கின்றனர்.
அனு பெங்களூரில் பணியாற்றி வருகின்றார்.இந்த நிலையில் கத்தாரில் பணிபுரியும் கணவனை வழியனுப்ப அவர் திருச்சூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வெகுநேரமாக பேருந்துநிலையத்தில் காத்திருந்த அனுவின் கணவர் அவருக்கு போன் செய்து பார்த்துள்ளார்.
போனை எடுத்து அனு பேசவில்லை, வேறொருவர் பேசி இருக்கின்றார். அவர் கூறிய செய்தியைக் கேட்ட அனுவின் கணவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அவிநாசி தனியார் பேருந்து விபத்தில் அனு உட்பட 19 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர்.
இந்த தகவல் அறிந்த அனுவின் கணவர் அவிநாசிக்கு உடனடியாக விரைந்து வந்து ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி அலைந்து தனது ஆசை மனைவி அனுவின் சடலத்தை கண்டுபிடித்து கதறி அழுது இருக்கின்றார். பார்த்தவர்களை கலங்க வைத்து இருக்கின்றது அந்த கணவனின் கதறல்.
English Summary
husband lost his wife in avinasi accident