அதிகாலை நேரம், அசைவற்று கிடந்த கர்ப்பிணி தாய்.! சமயலறையில் சத்தம்., திடுக்கிட்ட குழந்தைகள்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் தேனீரில் சர்க்கரை குறைவாக இருந்த காரணத்தால் கர்ப்பிணி மனைவியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பார்பர் பகுதியைச் சேர்ந்த பப்லு குமார் என்பவருக்கு ரேணு என்ற பெண்ணுடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. 

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது மீண்டும் ரேணு கர்ப்பமாக இருக்கின்றார். இந்த நிலையில், காலை நேரத்தில் பப்லு குமாருக்கு டீ போட்டு கொடுப்பதை போல மனைவி போட்டுக் கொடுத்துள்ளார். அந்த டீயில் சர்க்கரை குறைவாக இருந்ததால் அவரிடம் பப்லு சண்டைப் போட்டு இருக்கின்றார். 

இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பப்லு குமார் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ரேணுவை கழுத்து அறுத்து கொலை செய்து இருக்கின்றார். 

தாயின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த குழந்தைகள் சமையலறைக்கு ஓடிச்சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் தலைமறைவாக உள்ள பப்லு குமாரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband killed wife  using knife 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->