அந்த வீடியோவை வைத்து மிரட்டிய கணவன்.! காரணத்தை கேட்டு கதிகலங்கிய போலீஸ்.! - Seithipunal
Seithipunal


பெங்களூரில் கிரிநகர் பகுதியைச் சேர்ந்த நிஷா என்ற 37 வயது பெண்மணி தன்னுடைய 13 வயது மகளுடன் வசித்து வருகின்றார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிஷா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நிஷாவிற்கு மதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாகி 2019 டிசம்பரில் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். 

மிகவும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த இருவருக்கும் திடீரென அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மதனின் குடும்பத்தினருக்கு இந்த திருமணம் குறித்து தெரிய வந்து அவர்கள் வேறு பெண்ணுக்கு மதனை திருமணம் செய்துவைக்க பார்த்து இருக்கின்றனர். 

இதற்கு மதனும் சம்மதம் தெரிவித்துள்ளதை அறிந்து கொண்ட நிஷா இதுகுறித்து மதனிடம் விவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டபோது, மதன் ஷாவிடம் 20லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு மிரட்டி இருக்கின்றார். 

பணம் தரவில்லை என்றால் உன்னுடைய ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அந்த பெண்ணை மிரட்டி எடுக்கிறார். இதனை தொடர்ந்து நிஷா மன உளைச்சலுக்கு ஆளாகி காவல் நிலையத்தில் புகாரளிக்க இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband black mail wife in Bangalore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->