கணவனை தகாத வேலை செய்து சீண்டிய மனைவி.! அரங்கேறிய கொடூரச்செயல்.!
husband attempt murder in misoor
மைசூருவில் இருக்கும் பெரியபட்னாவில் கடந்த வியாழக்கிழமை கணவனை டிக்டாக் வீடியோ மூலமாக வெறுப்பேற்றிய கர்நாதல் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பாக சீனிவாசாவும், சவிதாவும் திருமணம் செய்து இருக்கின்றனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சவிதா தன் கணவரை பிரிந்து மைசூருவில் தனியாக வசித்து வருகின்றார். இருப்பினும், குழந்தைகள் தங்களுடைய தந்தையுடன் தான் இருக்கின்றனர்.
கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் கூட சவிதா தன்னுடைய கணவனை கடுப்பேற்ற மோசமான வேலையை செய்திருக்கின்றார். இதுகுறித்து சீனிவாசனின் வாக்குமூலத்தில், "என் மனைவி சவிதா வேறு ஒரு நபருடன் போஸ் கொடுத்து, டிக்டாக்கில் டான்ஸ் ஆடி அந்த விடியோவை எனக்கு எடுத்து அனுப்பி சீண்டினார்.
இதனால், நான் கோபமுற்று எனது மனைவியை பெரியபட்னாவில் இருக்கும் ஒரு விழா மண்டபத்தில் நடைபெற்ற எங்களுடைய மகனின் பிறந்தநாளுக்கு அவளை அழைத்திருந்தேன். அங்கே சவீதா வந்ததும், ஒரு கத்தியை வெளியே எடுத்து, மூன்று முறை அவளை குத்தினேன். இதனால், சவிதாவின் முதுகிலும், வயிற்றிலும் காயம் ஏற்பட்டது." என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் சீனிவாசாவை கைது செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
husband attempt murder in misoor