சிறுவர்களை லாரிகயில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கொடூர சம்பவம்.. வைரலாகும் வீடியோ.!
Horrific incident of children tied to a lorry and dragged away
திருடியதாக கூறி சிறுவர்களை லாரியில் கட்டி இழுத்துச் சென்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காய்கறி சந்தையில் பணம் திருடியதாக இரண்டு சிறுவர்களை லாரியில் கட்டி லாரி ஓட்டுனர் மற்றும் அங்கிருந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
அதன் பிறகு அந்த சிறுவர்களை லாரியின் பின்புறம் கட்டி சந்தை முழுவதும் இழுத்துச் சென்றுள்ளனர். இதில் சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர். மேலும் சிறுவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
English Summary
Horrific incident of children tied to a lorry and dragged away