கேரள கர்ப்பிணி யானை போல, பசுவிற்கு அரங்கேறிய சோகம்.!!
Himachal Pradesh cow affected food on bomb
இந்தியாவின் கேரள மாநிலத்தில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொடுத்து யானை உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் மாட்டிற்கு வெடிவைத்து கொடுத்த சம்பவம் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் இருக்கும் பகுதியில், கடந்த மே 26 ஆம் தேதியன்று கருவுற்ற பசு கோதுமை மாவு உருண்டையை உட்கொள்ள முயன்றுள்ளது. இந்த சமயத்தில், உருண்டை பசுவின் வாயில் வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் வாய் கிழிந்து ரத்தம் வழிந்த நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர், கோதுமை உருண்டையில் வெடிபொருள் வைத்திருப்பதை கண்டறிந்துள்ளார். இதனையடுத்து குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாடுகள் பயிரை சேதப்படுத்தியதால் பக்கத்து வீட்டுக்காரர் வெடியால் நிரப்பப்பட்ட கோதுமை உருண்டையை கொடுத்து இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Himachal Pradesh cow affected food on bomb