ஆர்.கே.நகர் தேர்தல் வழக்கில்., தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
high court rk nagar election
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு இடைதேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வை சேர்ந்த மருது கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கின் ரகசிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் திமுக மருது கணேஷ் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கின் ரகசிய அறிக்கையை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது. இதையடுத்து டிசம்பர் 4ஆம் தேதிக்குள், பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவு.
English Summary
high court rk nagar election