தீராத வயிற்றுவலியினால் அவதி..! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!  - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாதில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களின் அலட்சியத்தின் காரணமாக சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலங்கானா, ஹைதராத் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனையில் 10 வயது சிறுமி ரம்யா ஸ்ரீ என்பவர் கடுமையான வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, அங்கு அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் போது அவர் பரிதாபமாக உயிர் உயிரிழந்தார். திடீரென சிறுமி உயிரிழந்ததற்கு மருத்துவர்கள் அதிக அளவில் ஊசி போட்டது தான் காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள்.

மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy stomach pain for 10 years old girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->