துஷ்யத் சௌதலாவிடம் துண்டு போட்ட காங்கிரஸ்.! பாஜகவின் நிலைப்பாடு என்ன.?!
haryana congress speech with thushyath
கடந்த 21ஆம் தேதி ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், பாஜக கூட்டணி ஒரு அணியாகவும் துஷ்யத் சௌதலாவின் ஜனநாயக ஜனதா கட்சி ஒரு அணியாகவும் போட்டியிட்டது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 32 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. பாஜக 36 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. துஷ்யத் சௌதலாவின் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில், இந்த மூன்றாவது கட்சியின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் மற்றும் பாஜக வெற்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
பாஜக கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் ஹரியானாவில் ஆட்சியை பிடித்தது.
அந்த தேர்தலில் 76.13 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் 2019ஆம் ஆண்டு நடைபெறும் இந்த தேர்தலில் 68.41 சதவீதம் வாக்குகள் தான் பதிவாகியிருக்கின்றது. பாஜக காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகின்றது.
தற்போது, இந்தியாவின் துஷ்யத் சௌதலாவின் ஜனநாயக ஜனதா கட்சி கிங் மேக்கராக திகழ்கிறது. பாஜக 40 இடங்களை தாண்டிவிட்டால் ஹரியானாவில் தொங்கு சட்டசபை அமைவதை தடுக்க இயலும். அப்படி இல்லை என்றால் கர்நாடகாவின் நிலைதான் ஹரியானா விற்கும் ஏற்படும்.
இந்நிலையில், தற்போது காங்கிரஸ் துஷ்யத் சௌதலாவிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
English Summary
haryana congress speech with thushyath