மகன் பதவி ஏற்பதை காண சிறையிலிருந்து வெளியே வந்த அரசியல்வாதி..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில், ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இருப்பினும், அதிக இடங்களை வென்ற பாஜகவுக்கு ஜே.ஜே.பி. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தனர். இதை தொடர்ந்து நேற்று பாஜகவின் மனோகர் லால் கட்டார் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
அவருடன் துணை முதல்வராக ஜெ.ஜே. பி கட்சியின் சட்ட மன்ற தலைவர் துஷ்யந்த் சவுத்தாலா பதவியேற்றார்.

தனது மகன் துஷ்யந்த் சவுத்தாலா முதல்வராக பதவியேற்பதை காண அவரது தந்தையான அஜய் சவுதாலா இரண்டு வார பெயிலில் சிறையில் இருந்து நேற்று காலை வெளியே வந்து பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஒரு தந்தையாக எனக்கு மிகப்பெரிய பரிசு, இந்த கூட்டணி அரசாங்கம் நிலையாகவும், மாநிலத்தில் மேம்பாட்டையும் கொண்டு வரும். மேலும் காங்கிரஸ் என்ன சொன்னாலும் அது வாழ்த்துக்கள் தான் என்று 
தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

haryana bjp assistant cm Dushyant Chuatala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->